தெலுங்கானா மாநிலத்தில் சட்ட மேல்சபை உள்ளது. இங்கு காலியாக உள்ள இரண்டு பட்டதாரிகள் தொகுதிக்கு அடுத்த மாதம் 14 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

பட்டதாரிகள் ஓட்டுப்போட்டு, தங்கள் பிரதிநிதியை மேல்சபைக்கு அனுப்பி வைப்பார்கள்.

மெகபூப்நகர்- ரெங்காரெட்டி- ஐதராபாத் பட்டதாரிகள் தொகுதியில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சியின் வேட்பாளராக சுரபி வாணி தேவி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் வேறு யாருமல்ல!

முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகள்.

கல்வியாளராக இருக்கிறார்.

வாணியை எம்.எல்.சி. தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதாக டி.ஆர்.எஸ்.கட்சி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நரசிம்மராவ் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட தெலுங்கானா முதல் –அமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் குடும்பத்தை அரசியலிலும் இறக்கி விட்டுள்ளார்.

– பா. பாரதி