புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.