Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது! நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்…

Oct 5, 2020
சென்னை: அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அக்டோபர் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான நிகழ்வுகளுக்கு  தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடற்கரை, தியேட்டர் போன்ற ஒருசில பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது.
இந்த நிலையில்,  மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி மீனவர் நலன் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், தொடர்ந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, சென்னை உயர்நீதி மன்றம், மெரினா கடற்கரை, மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், சென்னையில் கொரோனா ஊரடங்கில்  தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசு என்ன முடிவு செய்துள்ளது என்றும், கடற்கரையில் புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,  அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அக்டோபர் மாதம்  31 வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும், தமிழகத்தில் ஊரடங்கு இந்த மாதம் இறுதிவரை  நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என பதில்  தெரிவித்துஉள்ளது.
மேலும்,
மெரினாவில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் நவம்பர் 9 ந்தேதி திறக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெண்டர் திறப்பு குறித்து நவம்பர் 11க்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கை மீறுவோருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து, வசூலித்து வருகின்றனர். அத்துமீறலில் ஈடுபட்டால் ரூ.500-ம், முக கவசம் அணியாவிட்டாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கா விட்டாலும் ரூ.200-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தடையை மீறி கடற்கரைக்கு வருவோரிடம்,  ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது  குறிப்பிடத்தக்கது.

Post navigation

ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை! கே.எஸ்.அழகிரி
டெல்லி உயர்நீதி மன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணை தொடங்கியது…

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer