சென்னை:
மிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 30 ஐபிஎஸ் அதிகாரிகளில் ஐ.ஜி.க்களாக 14 பேருக்கும், டி.ஐ.ஜி.க்களாக 3 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி 13 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி, சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக ரம்யா பாரதி, நெல்லை சரக டிஐஜியாக பிரவேஷ்குமார், சேலம் சரக டிஐஜியாக பிரவீன்குமார், திண்டுக்கல் சரக டிஐஜியாக ரூபேஷ்குமார் மீனா, வேலூர் சரக டிஐஜியாக ஆனி விஜயா, திருப்பூர் காவல் ஆணையராக பாபு,

மதுரை சரக காவல்துறை டிஐஜியாக பொன்னி, சமூக நீதி மற்றும் மனித உரிமை காவல்துறை ஐஜியாக செந்தாமரை கண்ணன், தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக மகேஸ்வரி, தஞ்சை சரக டிஐஜியாக கயல்விழி, தமிழக காவல்துறை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக காமினி, நெல்லை காவல் ஆணையராக துரைக்குமார், உளவுத்துறை ஐ.ஜி.யாக ஆசியம்மாள்,

சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக கபில்குமார், அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக விஜயகுமாரி, லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக லலிதா லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.