புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியிலுள்ள ரெயின்போ நகர் பகுதியில் உள்ள சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்பு பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 300 குடும்பத்தினர் மேல் வசிக்கின்றனர்.
தற்போது ஊரடங்கு தடை உத்தரவால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சூழலில் குடியிருப்புவாசிகள் ஒத்துழைப்போடு புரொஜக்டர் மூலம் பொதுமக்கள் படம் பார்க்க ஏற்பாடு செய்து உள்ளார் அந்த குடியிருப்புவாசி கங்கா சேகரன்.
கடந்த 15 நாட்களாக படங்கள், பாடல்கள் மாலை முதல் இரவு வரை திரையிடப்படுகிறது.
இச்சூழலில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க இணை செயலர் ஸ்ரீதர் முதல்வர் நாராயணசாமியிடம் புகார் தெரிவித்துள்ளார். அனுமதி பெறாமல் பொது இடங்களில் திரைப்படங்களை அகண்ட திரையில் திரையிடுவது விடியோ பைரசி சட்டப்படி குற்றம். அகண்ட திரையில் சிடியில் திரைப்படம் திரையிடுவது கடுமையான குற்றம். இக்குற்றச்சம்பவம் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.