சென்னை

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி,  உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

“தேவையான பாடக் குறிப்புகளை மின்னஞ்சல் வழியே மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும். மேலும் வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி பேராசிரியர் – மாணவர் தொடர்பில் இருக்கவும், பாடம் தொடர்பான மாணவர்களின் ஐயங்களை தீர்க்கவும் வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அக்கடிதத்தில் துணைவேந்தர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தவிர்க்க இயலாத வழக்குகளை உச்சநீதிமன்றம் காணொலி   வழியே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.