அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் தீரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

கட்சிக் கொள்ளை கோட்பாடுகளுக்கு முரணான செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

அ.தி.மு.க. சார்பாக ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தபோதே தீரன் நீக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.