டெல்லி: கடந்த 2014 முதல் இதுவரை சுமார்  ரூ. 1லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களும்,, கடந்த நான்கு ஆண்டுகளில் 69,045 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது நாடாளுமன்றத்தில்  மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் பதில் தெரிவித்து உள்ளது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ரூ. 1.16 லட்சம் கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாகவும் கடந்த 4 ஆண்டுகளில் 69,045 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை முடக்கியுள்ளது என  மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக த்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் அளித்துள்ள பதிலில்,

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2014 ஜனவரி முதல் 2023 அக்டோபா் 31-ஆம் தேதி வரை ரூ. 1,16,792 கோடி ரொக்கம் மற்றும் சொத்துகளை தற்காலிகமாக முடக்கி, ரூ. 16,637.21 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளது.

வெளிநாடு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தடைச்சட்டம் 2018-இன் கீழ் ரூ. 16,740.15 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி, ரூ.15,038.35 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளது.

கடந்த 2019 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2023 மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான 4 ஆண்டு காலத்தில் மட்டும் ரூ. 69,045.89 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியது.

மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் அமலாக்கததுறை மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் வெளிநாடு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளில் நால்வா் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனா். மேலும் மூவரை இந்தியாவுக்கு நாடு கடத்த சம்பந்தப்பட்ட நாடுகளின் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.