பருத்தி வீரன் படத்தில் உச்சம் தொட்ட பிரியா மணியை, அதன் பிறகு தமிழில் அதிக படங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால் தெலுங்கில் ’பிஸி’ யாக இருக்கிறார்.

ஈ-டி.வி.யி.ல் ஒளிபரப்பாகும் ’தீ’ நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். தெலுங்கில் நாரப்பா, சயனைட், விராத பருவம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில், தான் எடுத்துக்கொண்ட புதிய போட்டோக்களை வெளியிடுவதையும், ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அண்மையில் கருப்பு உடை அணிந்து தான் எடுத்த கவர்ச்சி போட்டோவை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டார்.

அதனை பார்த்த ஒரு ரசிகர், “உங்களின் நிர்வாண புகைப்படத்தை பிரியா இன்ஸ்டாகிராமில் வெளியிடுங்களேன்” என கேட்டிருந்தார்.
ஆத்திரப்படமால், “உனது அம்மாவிடமும், சகோதரியிடமும் நிர்வாணப்படத்தை கேட்டு பெற்று வெளியிடு. அதன் பின் எனது நிர்வாண போட்டோவை வெளியிடுகிறேன்” என பிரியா மணி பதில் அளித்துள்ளார்.

பிரியா மணியின் பதிலை பார்த்த ரசிகர், பின்னர், அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

– பா. பாரதி