தருமபுரி: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி இஸ்லாமிய ஆசிரியர் ஒருவர், அங்கு படித்து வரும் 8ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் ஆசை காட்டி  கடத்தி சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த  பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம்  அரூர் அருகே உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து  8ஆம் வகுப்பு படிக்கும்  அதே பள்ளியில் பணியாற்றிய ஆங்கிலதுறை ஆசிரியர் முபாரக் என்ற ஆங்கில ஆசிரியர் கடத்தி சென்றார். இதனை தொடர்ந்து  மாணவியின் பெற்றோர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை தேடி வந்தனர்.  சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து  கண்காணித்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், அயோத்தியபட்டினம் பகுதியில் இருந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதையடுத்து,  ஆங்கில ஆசிரியர் முபாரக்கை போக்ஸோ சட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்றவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து சிறுமியை கடத்தி சென்ற முபாரக் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி உத்தரவிட்டார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ள முபாரக்கை, மீண்டும் காவல் துறையினர் கைது செய்தனர்.