நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர், அசோக்குமார். ஆம்புலன்ஸ் டிரைவர்.

சேலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம் ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். பல முறை விண்ணப்பித்தும் அசோக்குமாருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் அவர் ஜெயிலில் இருக்கிறார். ஜாமீன் கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்த அவருக்கு அண்மையில் கிடைத்த இன்னொரு செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

“பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை கிடைக்கும்” என்ற செய்தியே, அது.

கடந்த சில தினங்களாக அவர் மிரட்சியில் காணப்பட்டார். மன உளைச்சலில் இருந்த அசோக்குமார், ஜெயிலில் உள்ள வார்டில் தற்கொலை செய்து கொண்டார்.

மின் விசிறியில், தனது வேட்டியால் தூக்கு போட்டு அசோக்குமார் தற்கொலை செய்துள்ளதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

– பா. பாரதி