டெல்லி:  சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க அடுத்த மாதம் (ஏப்ரல் 8-ம் தேதி) பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தருகிறார்.

தமிழ்நாட்டில்,  சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதை  தொடங்க விழா ஏப்ரல் 8ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி, வந்தேபாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, தாம்பரம் – செங்கோட்டை, திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ள இடையேயான ரயில் சேவைகள்  cஉ ள்பட  ரூ.294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தமிழ்நாட்டில்  பிரதமர் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.