புதுடெல்லி:
சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

நாடு முழுவதும் நாளை 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று இரவு ஏழு மணிக்கு இந்தியிலும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் நாட்டு மக்களுக்காக உரையாற்ற உள்ளார். அவரது உரை அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட உள்ளது.

குடியரசுத் தலைவர் உரை பின்னர் அந்தந்த மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தூர்தர்ஷ்னில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.