சென்னை:
தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு அரசின் 2021-22 ஆண்டு நிதி நிலை அறிக்கையைப் படித்தேன். 6 மாதங்களாக நடைமுறையில் உள்ள இடைக்கால நிதி நிலை அறிக்கையில் அவசியமான சில திருத்தங்களைச் செய்து எஞ்சியுள்ள 6 மாதங்களுக்கு அறிக்கையை நிதி அமைச்சர் தந்திருக்கிறார். இது சிக்கலான, சிரமமான பணி என்று குறிப்பிட்டுள்ளார்.

நிதி நிலை அறிக்கையில் தி மு கழகத்தின் சமுதாய நோக்கு அழுத்தமாகப் பதிந்திருக்கிறது, இது பாராட்டுக்குரியது. தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.