மும்பை:
காராஷ்டிராவில் பெய்த பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மீட்பு பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 671 பேர் உயிரிழந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 2 லட்சத்து 58 ஆயிரத்து 371 ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 32 ஆயிரம் வீடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன என்று தெரிவித்தார்.