சென்னை:

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, இதுவரை பிரசார வியூகங்களை வகுக்காமல் இருந்து வந்தது கேள்விகுறியான நிலையில், வரும்  27-ந்தேதி தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

உடல்நலம் இல்லாமல் சிகிச்சைபெற்று வரும் விஜயகாந்த் பிரசாரம் செய்ய முடியாத நிலையில், பிரேமலதா, வரும் 27ந்தேதி  திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பிரசாரத்தை தொடங்கி ஏப். 16-ம் தேதி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபெறவுள்ள 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க. தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தலைவர் கேப்டன் விஜயகாந்தின் ஆணைக் கிணங்க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27.03.2019 (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.