சென்னை:

விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி அமைந்துள்ள இடம் வங்கி கடனுக்காக ஏலத்துக்கு வந்துள்ள நிலையில், தங்களதுக்க போதிய அளவு வருவாய் இல்லை என பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே மாமண்டூர் பகுதியில், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்ள சுமார் 75 அளவிலான நிலத்தை வைத்து விஜயகாந்த் தரப்பில் ரூ.5 கோடி கடன் வாங்கப்பட்ட நிலையில், அதை திருப்பி செலுத்தாததால், ஐஓபி வங்கி அந்த இடத்தை ஏலத்துக்கு விடுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.இது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் விஜய காந்த்தின் மனைவி பிரேமலதாவும், அவரது சகோதரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, பொறியியல் கல்லூரியை மேம்படுத்துவதற்காக கடன் பெறப்பட்டதாக தெரிவித்துள்ள பிரேமலதா, ஏலம் பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர்கொண்டு தீர்வு காண்போம் என்று கூறினார்.

மேலும், உடல்நலம் இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் சினிமாவில் நடிப்பது இல்லை என்று கூறியவர், கோயம்பேட்டில் உள்ள, திருமண மண்டபமும் இடிக்கப்பட்டதால் , தங்களுக்கு போதிய அளவு வருவாய் இல்லை  என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், தமிழகத்திலுள்ள நிறைய பொறியியல் கல்லூரிகள் கடனில்தான் உள்ளது என்றும், எங்கள் பொறியியல் கல்லூரியின் வளர்ச்சிக்காக வாங்கிய கடன் தான் அது; சட்டப்பூர்வ மாக இந்த பிரச்னையை சந்தித்து மீண்டு வருவோம்  என்று  நம்பிக்கை தெரிவித்தார்.

நேர்மையானவர்களுக்கு சோதனைகள் வரும், ஆனால் கடவுள் கைவிட மாட்டார் என்று கூறியவர், ஒவ்வொரு கால கட்டத்திலும் கடனை திருப்பி செலுத்தியே வந்தோம், விரைவில் கடனை அடைத்து கல்லூரியை மீட்போம்.

இன்றைய காலக்கட்டத்தில், கல்லூரியில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், நாங்கள் கடனை திருப்பி செலுத்த மேலும் அவகாசம் கேட்ட நிலையில், வங்கி நிர்வாகம் ஏற்கனவே பல முறை கொடுத்து விட்டதால், மீண்டும் தர முடியாது என்று மறுத்து விட்டது என்றும் கூறினார்.

தமிழகத்தில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் அதிகரித்து வந்ததும், தற்போது பொறியியல் படித்துள்ளவர்களுக்கு வேலை இல்லை என்ற காரணத்தாலும், இதன் காரணமாக  அட்மிஷன் குறைந்துள்ளதாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் நிலைமையும் இதுதான் என்று கூறியவர்

இவ்வாறு அவர் கூறினார்.