5prabhudeva

பிரபு தேவா தமிழ் நாட்டை விட்டு பாலிவுட் பக்கம் சென்று 12 வருடங்களுக்கு மேல் ஆகின்றது, அப்படி இருக்கும் போது அவர் அங்கு சென்று சில படங்களை இயக்கி முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார். இப்போது மீண்டும் இவர் ஒரு சரித்திரப் படத்தை இயக்க முடிவெடுத்துள்ளாராம்.

இவர் இயக்கவுள்ள திரைப்படம் தெலுங்கில் ராம் சரண் நடித்து மெகா ஹிட் ஆன “மகதீரா” படத்தை ஹிந்தியில் ரீமெக் செய்யவுள்ளாராம், இதற்கு முன்பு சில தெலுங்கு படங்களை இவர் ரிமேக் செய்து அந்த படங்கள் அங்கு மெகா ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் கார்த்தி – விஷாலை வைத்து தமிழில் “கருப்பு ராஜா வெள்ள ராஜா” என்ற தலைப்பில் படத்தை இயக்கவுள்ளாராம். இந்த படத்திற்கான கதையை தயார் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. தற்போது வரை இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகதீராவின் இந்தி ரீமேக் நிச்சயம் அடுத்த ஆண்டு தொடங்கிவிடும் என்று கூறப்படுகின்றது.