கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகள் மற்றும் எரி பொருட்கள் நிரப்பு பணிகள் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் 1000 மெ.வாட் மின்சார உற்பத்தி தடைபட்டிருந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளதாக அணுமின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.