உலகம் முழுவதும் கோரத் தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸால் இந்த ஆண்டு நடைபெறவேண்டிய சினிமா படப்பிடிப்புகள், நிகழ்வுகள், விருது நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடைபெறுவதாகத் திட்டமிடப்பிட்டிருந்த ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நான்கு மாதங்கள் தள்ளிப்போய் ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது।
கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்த வருட ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இணையத்தில் ஸ்ட்ரீமிங்கில் வெளியான படங்களை மட்டுமே அனுமதிக்கவுள்ளதாக ஆஸ்கர் குழு தெரிவித்திருந்தது। இந்தச் சூழலில் தற்போது ஆஸ்கர் விழாவும் ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது।
கடந்த 93 ஆண்டுகளில் ஆஸ்கர் விழா ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை।