சென்னை:

சிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசியர்கள் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே  கடைசி நாள். இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பம் செய்யும் பணி நிறைவு பெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த (ஜூன்)  மாதம் 12ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, ஜூன்  24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும்,  பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டது.  இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று  மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வானது,  முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண் களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.