அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில், அண்மையில் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகின அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி , ஆதித்ய கரிகாலனாக விக்ரம் , சுந்தர சோழராக அமிதாப் பச்சன் , வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி , பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு , நந்தினியாக ஐஸ்வர்யா ராய் , குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வந்தது.

இந்நிலையில், பூங்குழலி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ கதையைப் பொறுத்தவரை, இந்தப் பூங்குழலி கதாபாத்திரம் மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.