கணவர் அழுததால், புகாரை வாபஸ் வாங்க நடிகை பூனம். முடிவு…
நடிகைகளின் திருமணங்கள் நீண்ட காலமாகவே விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு, விவாகமும்,விவாக ரத்தும் ஒரு விஷயமே அல்ல.
அந்த கலாச்சாரம் இங்கும் பரவி விட்டது.
திருமணமான 20 நாட்களில் கணவனை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்து, பின்னர் மனதை மாற்றிக்கொண்ட நடிகையின் கதை இது:
இந்தி சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை பூனம் பாண்டே.
இவரும், தயாரிப்பாளர் சாம் பாம்பே என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர்.
கடந்த ஒன்றாம் தேதி கல்யாணமும் செய்து கொண்டார்கள்.
சில நாட்களுக்கு முன் இந்த புதுமண ஜோடி கோவா சென்றது.
பூனம் பாண்டேவுக்கு ஷுட்டிங் இருந்தது. தேனிலவையும் சேர்த்துக் கொண்டாடலாம் எனக் கணவர் சாம் பாம்பேயை, பூனம் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
ஓட்டல் அறையில் தங்கி இருந்த போது கணவன் –மனைவி இடையே கடந்த திங்கள் கிழமை சண்டை மூண்டுள்ளது. விவகாரத்தை போலீஸ் நிலையம் வரைக்கும் கொண்டு சென்றார், பூனம்.
‘’சாம் பாம்பே என்னை மானபங்கம் செய்தார்’’ என கணவன் மீதே விநோத புகாரை அளித்த பூனம், ‘சாம் என்னை. அடித்து உதைத்தார். தலை முடியைப் பிடித்து கட்டிலில் தள்ளினார். ‘’ என்றும் புகாரில் கூறியதால், அன்று இரவே சாம் பாம்பேயை கோவா போலீசார் கைது செய்தனர்.
நீதி மன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.
அப்போது பேட்டி அளித்த பூனம்,’’ அடிக்கும் அளவுக்குப் போய் விட்டதால், சாம் பாம்பேயை விவாகரத்து செய்யப்போகிறேன்’’ எனக் கூறினார்.
இது இந்தி சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது பேட்டி அளித்துள்ள பூனம் பாண்டே’’ சாம் பாம்பே மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்க போகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
‘’என்னை சாம் அடிக்கடி, அடித்து உதைப்பதும் பின்னர் அழுது கொண்டு மன்னிப்பு கேட்பதும் வாடிக்கை. இப்போதும், அழுது அரற்றி, என் முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார்.
‘’இனிமேல் அடிக்க மாட்டேன்’ என சத்தியம் செய்து கொடுத்துள்ளார். அதனை நம்புகிறேன். எனவே சாம் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்க இருக்கிறேன்’’ என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார், பூனம் பாண்டே.
சாம் பாம்பே தாக்கியதால் , மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றதாகவும், சாம் பாம்பே அடித்து உதைத்ததில் தான் செத்துப்பிழைத்ததாகவும் அந்த பேட்டியில் பூனம் தெரிவித்துள்ளார்.
-பா.பாரதி.