பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பேர் போனவர்.
தற்போது கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது ஆண் நண்பர் ஷாம் அகமதுடன் மும்பை மெரைன் டிரைவ் சாலையில் சென்றுள்ளார்.
எந்தவித காரணமும், அரசு அனுமதியும் இன்றி ஊர் சுற்றிய இருவரையும் அப்பகுதியின் போலீசார் கைது செய்து எச்சரித்து விடுவித்தனர். ஆனாலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கவில்லை.
மேலும் இருவர் மீதும் ஊரடங்கை மீறி நோய்பரப்பும் நோக்கத்துடன் வெளியே சுற்றியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.