நெஞ்சிருக்கும் வரை, உன்னைபோல் ஒருவன், வெடி பன்ற படங்களில் நடித்திருப்பதுடன் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்திருப் பவர் பூனம் கவுர். தான் அழுத்தத்தில் சாக விரும்பவில்லை என்று கூறி உள்ளார்.

இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு என்ன நடந்தது என்று எல்லோருக்குமே தெரியும். 2017 ம் ஆண்டே இதுபற்றி நான் தெரிவித்திருக்கிறேன். எனக்கு நரம்பு பிரச்னை உள்ளது. துபாயிலிருந்து வந்து எனது தோழி என்னை பார்த்துக் கொண்டார். எனக்கு என்ன நடந்தது என்பது அவருக்கும் தெரியும். என்னை இந்த நிலைக்குள்ளாக்கிய இயக்குனரை மூன்று முறைக்கு மேல் சந்தித்து என்னை இந்த நிலையிலிருந்து விடுவிக்கும் படி கேட்டார். என் பெயர், புகழ், சந்தோஷம் எல்லாமே என்னிடமிருந்து காணாமல் போய்விட்டது.
நான் நிம்மதியாக தூங்கி 3 வருடம் ஆகி விட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதுபோல் நான் மன அழுத்தத்தில் சாக விரும்பவில்லை. ஆனால் நான் இன்னும் போரடிக்கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு பூனம் கவுர் கூறி உள்ளார்.
பிரபல இயக்குனரிடம் சிக்கி தவிப்பதாக கூறியுள்ள பூனம் கவுர் அந்த இயக்குனர் யார் என்பதை வெளிப்படையாக சொல்ல வில்லை.