சென்னை

ச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொன்முடி மீண்டும் தமிழக அமைச்சராகிறார். 

சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர்  பதவியையும் இழந்தார்.

இந்த  தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

சமீபத்தில் பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருக்கோவிலூர் தொகுதி சமீபத்தில் காளியானதாக அறிவிக்கப்பட்டது.  உச்சநீதிமன்றம் குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்ததால் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர் என் ரவிக்குத் தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து தனது பரிந்துரையுடன் முதல்வ மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இன்று மாலை அல்லது நாளை காலை பொன்முடியை மீண்டும் அமைச்சராகப் பதவியேற்பு செய்ய வேண்டும் என முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.