சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, தமிழகம் முழுவதும் இயக்கப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். அதன்படி 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக வருகிற 17-ந்தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, 94450 14450, 94450 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், 044 24749002, 044 2628445, 044 26281611 எண்களிலும் புகார் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.