சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத்தொகையை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில்  அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பும், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2,500 ரொக்கமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

இந் நிலையில் பொங்கல் தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத்தொகையை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 30ம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்பட இருக்கிறது. இந்த டோக்கனை வரும் 31ம் தேதி வரை வீடு தேடி சென்று ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகிக்க உள்ளனர்.