ரும் (2018ம்) ஆண்டில், பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை அறிவித்துள்ளது மத்திய அரசு.

தமிழகத்தில், பொங்கல் பண்டிகை பாரம்பரியமாக கொண்டாடப்படும் திருவிழா ஆகும். அதே தினம்  ஆந்திரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் உட்பட, பல மாநிலங்களில், அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.

ஆனாலும் பொங்கலுக்கு மத்திய அரசு, கட்டாய விடுமுறை அறிவிக்காமல் இருந்தது.  விருப்பம் உள்ளோர், விடுப்பு எடுக்க அனுமதித்திருந்தது.

அதற்கு, தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பிறகு மத்திய அரசு தன் அறிவிப்பை திரும்ப பெற்றது.

இந்நிலையில், விரைவில் வர இருக்கும் அடுத்த ( 2018ம்) ஆண்டுக்கான, விடுமுறை பட்டியலை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில், பொங்கலுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்து.

இதன் மூலம், விடுமுறை குறித்து  இந்த ஆண்டில் ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்திய அரசு, முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

இதேபோல, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, புனித வெள்ளி, மிலாடிநபி உள்ளிட்ட, 17 தினங்களை, 2018ல், கட்டாய விடுமுறை தினங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும்  ஜன., 1, ஹோலி, ஓணம், சிவராத்திரி உள்ளிட்ட, 18 நாட்கள், விருப்ப விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விடுமுறை நாட்களை, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய, தமிழ்நாடு பிராந்திய, மத்திய அரசு ஊழியர் நல சங்க ஒருங்கிணைப்பு குழு கூடி முடிவெடுத்தது.