மதுரா: 

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியாரை அரவது பக்தர்கள் அடித்து உதைத்த சம்பவம் உத்திரபிரதேசத்தல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பிருந்தாவனத்தில் ஆசிரம்ம் நடத்தி வருகிறார் சாமியார்  பாபா பாசுதேவ் சாஸ்திரி. சமீபத்தில் இவர் மகராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் இவரிடம் பகவத் கீதை  கற்க வந்தனர். அவர்களுக்கு கீதை சொல்லிக் கொடுப்பதாக கூறி, பாலியல் தொல்லை அளித்துள்ளார் சாமியார்.

அதோடு அவர்களை ஆபாசமாக படங்கள் எடுத்து அதை வைத்து மிரட்டி 6 மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார்.

இந்த சம்பவம் அவரது பக்தர்களக்கும் பொது மக்களுக்கும் தெரியவந்தது.  இதனால் ஆத்திரமான மக்கள்,  பாசுதேவ் சாமியாரை பிடித்து அடித்து உதைத்தனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட இரு பெண்களும் சாமியாரின் ஆடையை உருவி கம்பால் அடித்து உதைத்தனர்.

தகவலறிந்த  காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சாமியாரை கைது செய்தனர்.

 

./