சூர்

மிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதை வரவேற்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் பேருந்துக் கட்டணங்கள் இரு மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளன,    இதனால் பொது மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.   அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த கட்டண உயர்வை எதிர்க்கின்றன.

வரும் 27 ஆம் தேதி கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக திமுக அறிவித்துள்ளது.    அதேபோல பாஜகவும் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து 24ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

ஆனால் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப் பட்டதை தாம் வரவேற்பதாக கூறி உள்ளார்,    அமைச்சரின் இந்தப் பேச்சு அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.