பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இளம் பெண்களுக்கு நடந்த விபரீதம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த 4 பேரை தண்டிக்க வேண்டும் என கொந்தளித்துள்ளார்

சிறிது நேரத்திலேயே இந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.