நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை வெளிக் கொண்டு வந்ததே நான்தான் பாதிக்கப்பட்ட பெண் தரப்பு அணுகியதை தொடர்ந்து காவல்துறையில் புகாரளிக்க நான்தான் கூறினேன். குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு உரிய அழுத்தம் கொடுத்தேன் பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சி.என் மீது பரப்பப்படும் அவதூறு தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன் – பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
இன்னொரு முக்கியமான விஷயம். இதே பொள்ளாச்சியார் சொன்னது..
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் தொடர்பு டைய நாகராஜ் யார் என்று தெரிந்தவுடன் அவரை அதிமுகவில் இருந்து நீக்கினோம்..
இப்போ கோவை எஸ்பி பேட்டிக்கு போவோம்..
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் அரசியல் கட்சியினர் யாருக்கும் தொடர்பில்லை – கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.