சென்னை:
னவரி 31 முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் ஜனவரி 31ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் ஜனவரி 31ஆம் தேதி முதல் காலை 7 மணி முதல் 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.