கமது நகர்

மோடியை வாட்ஸ்அப் செய்தி மூலம் விமரிசித்த போலீஸ் கான்ஸ்டேபிள் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அகமது நகர் காவல் சரகத்தில் கான்ஸ்டேபிளாக பணி புரிபவர் ரமேஷ் ஷிண்டே.  இவர் முன்னாள் அமைச்சரும் தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான பாலாசாஹெப் தோரட் இடம் மெய்க்காப்பாளராக பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரமேஷ் ஷிண்டே, தனது வாட்ஸ்அப் பதிவு மூலமாக மோடியை கடுமையாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.   இந்த விவகாரம் பெரிதாக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகளால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.   போலீசின் சைபர்செல் மூலம் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பின் ரமேஷ் ஷிண்டே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அகமது நகர் போலீச் சுப்பிரண்ட் ரஞ்சன்குமார் ஷர்மா அறிவித்துள்ளார்