ஏரல்:  தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு என்பவரை மர்ம நபர்கள் குட்டியானை எனப்படும் சரக்கு வாகனத்தைக்கொண்டு மோதி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  குரூம்புர் அருகே உள்ளது ஏரல். இந்த பகுதியில் உள்ள கால்நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலு. இவர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,   குடிபோதையில் இருந்த  சரக்கு வாகன ஓட்டுநர் முருகவேல், காவல்துடிறயினருடன் தகராறு செய்துள்ளார். அவரை   எஸ்.ஐ. பாலு  கண்டித்து, எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நபர் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்ஐ பாலு மீது ஏற்றி கொலை செய்து விட்டு தப்பியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பியோடிய ஓட்டுநர் முருகவேலை தேடி வருகின்றனர்.