குலசேகரன்பட்டினம்

காவல்துறையினர் வேடம் அணிய குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். .இங்கு இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த  விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். திருவிழாவின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.

தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி காவலர் மற்றும் காவல்துறை சார்ந்த சீருடை போன்ற வேடங்கள் அணியப் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது., சாதிய அடையாளங்களுடன் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.