சென்னை

ற்போது சென்னை நந்தனத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்கும் திமுக மகளிர் உரிமை  மாநாடு நடந்து வருகிற்து.

தற்போது சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி திமுக மகளிர் அணி சார்பில் இந்த மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டிற்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

இந்த மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு  பெண் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.