சென்னை

பாஜக கும்பகோணத்தில் நடத்த இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரு 16 ஆம் தேதி பாஜக சார்பில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காகக் கும்பகோணத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுவதாகும் இந்த போராட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்க் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

”தமிழகத்துக்கும், கேரளா, கர்நாடகா அண்டை மாநிலங்களுக்கும் இடையே தீர்க்கப்படாத நதி நீர் பங்கீடு, அணை கட்டும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முயலாமல் வீண் நாடகமாடி நீண்ட காலமாக தமிழக மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போகிறோம்

என அறிவித்து இருந்தார்.

தற்போது பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பாஜகவின் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.  ஒத்தி வைக்கப்படுவதற்காக எவ்வித காரணமும் அவர் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.