சென்னை:
திமுக அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்லும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, சென்னை, ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., – பிரபாகர், நேற்று முன்தினம் மனு அளித்தார்.

பன்னீர்செல்வம் அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்ல, நீதிமன்ற அனுமதி பெற்று வந்தால், உரிய பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளோம் என, போலீஸ் தரப்பில், பன்னீர்செல்வம் தரப்புக்கு பதில் அளிக்கப்பட்டதாக, நேற்று தகவல் வெளியானது.

இதுகுறித்து, போலீஸ் நிலையத்தில் மனு அளித்த, பிரபாகர் கூறுகையில், ”போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து, அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் எங்களுக்கு வரவில்லை. பன்னீர்செல்வம் ஊரில் இருந்து வந்ததும், அனைவருடனும் கலந்தாலோசித்து தலைமை அலுவலகம் செல்லும் தேதியை அறிவிப்போம் என்று தெரிவித்தார்.