கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டுவருகிறது. இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் இருவர் புனித் ராஜ்குமாருக்கு முறையாக மருத்துவம் பார்க்கவில்லை எனக் கூறி அவரது குடும்ப மருத்துவர் ரமணராவ் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கர்நாடக மாநிலத்தில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர் ரமணராவ் வீடு மற்றும் மருத்துவமனைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.