சென்னை: தமிழகத்தில் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம், மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன் மற்றும் கோவை காவல் கண்காணிப்பாளர் அருள் அரசும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி ஜெயராம், தினகரனுக்கு பணியிடம் ஒதுக்கக்கூடாது என்று ஆணையிட்டுள்ளது.

மேற்கு மண்டல ஐஜியாக அமல்ராய், மத்திய மண்டல ஐஜியாக தீபக் எம். தாமோதர் மற்றும் கோவை காவல் கண்காணிப்பாளராக செல்வ நாகரத்தினம் ஆகியோரை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை திருச்சி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர், எஸ்பி, காவல் ஆணையர், மத்திய மண்டல ஐஜி உள்ளிட்ட அனைவரையும் இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.