சென்னை

சென்னையில் பாஜக நடைப்பயணத்துக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துள்ளது.

தமிழ்க பாஜக நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காகத் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற11-ஆம் தேதி சென்னை வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அப்போது அண்ணாமலையின் “என் மண், என் மக்கள்” பாதயாத்திரை 200 சட்ட மன்ற தொகுதிகளில் நிறைவு செய்ததின் அடையாளமாக பாஜக கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் பாஜக நடைப்பயணத்திற்கு காவல்துறையினர் அனுமதியளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் செயின்ட்  ஜார்ஜ் பள்ளியில் பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பாத யாத்திரையின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் யாத்திரை சென்று, பொதுக்கூட்ட மேடைக்குச் செல்ல பாஜக திட்டமிட்ட நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.