சென்னை: சென்னையில் இன்று முதல் நிமோனியா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.

நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் தடுப்பு பணிக்காக குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி, ஒன்றரை மாத குழந்தைகளுக்கு முதல் தவணையும், மூன்றரை மாதத்தில் இரண்டாவது தவணை, ஒன்பதாம் மாதத்தில் ஊக்குவிப்பு தவணை என மூன்று தவணைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம், பிறந்த குழந்தைகள் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு  ஒரு குறிப்பிட்ட காலம் வரை, அவர்களுக்கு பிசிஜி – காசநோய், ஹெபடைடிஸ் பி – கல்லீரல் மற்றும் புற்றுநோய், ஓபிவி – இளம்பிள்ளை வாதம், இன்ப்ளூன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று உள்ளிட்டவைகளுக்கு தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலை தடுக்கும் நியூமோகாக்கல் என்ற தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நேற்று ஜூலை 23ந்தேதி) முதல் இலவசமாக போடப்பட்டு வருகிறது. அதன்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி நேற்று மூலம் இலவசமாக போடப்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்பூசி  போடும் திட்டம் சென்னையில் இன்றுமுதல்  தொடங்கப்பட இருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் வரும்,  குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.