சென்னை:
சென்னையில் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு தடை காரணமாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், பெங்களூருடன் ஒப்பிடும்போது சென்னையில் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அறித்ததற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்திருந்தார் என்பது குரிப்பிடத்தக்கது.