டில்லி
பிரதமர் மோடி அனைத்து பெண்களும் ஒரே சாதி எனக் கூறி உள்ளார்.
மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும் சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்ற இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தின் மூலம் மத்திய அரசின் திட்டங்களைப் பெற முடியாதவர்களும் பயனடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ பயனாளிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
பிரதமர் மோடி அப்போது,
“பெண்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சமீப காலமாகச் சிலர் பிரிவினைகளை உருவாக்கி வருகின்றனர். பெண்கள் அனைவரும் ஒரே சாதி. அவர்கள் ஒன்றாக இணைந்து எந்த சவாலையும் எதிர்கொள்வார்கள்”
என்று தெரிவித்துள்ளார்.