சென்னை:

5 பெண்களுக்கு மானிய ஸ்கூட்டரை வழங்கி அம்மா ஸ்கூட்டர் திட்ட விழாவை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் அம்மா ஸ்கூட்டர் திட்ட துவக்க விழா இன்று தொடங்கியது.

இதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர் பிரதமர் மோடி, மகிழ மரக்கன்றை நட்டு வைத்தார்.  தொடர்ந்து அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழா தொடங்கியது.  பிரதமர் மோடி ஐந்து பெண்களுக்கு மானிய ஸ்கூட்டரை அளித்து அம்மா ஸ்கூட்டர் திட்ட விழாவை துவக்கி வைத்தார்.