சென்னை: மூன்று நாள் சுற்றுப்பயணமாக மார்ச் 15-ல் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 20234ல் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவது 5வது முறை இது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலத்திட்டம் மற்றும் அரசியல் பொதுக்கூட்டத்துக்கு தமிழ்நாட்டுக்கு அடிக்கடை வருகை தருகிறார் பிரதமர் மோடி. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவரது அடிக்கடி வருகையை எதிர்க்கட்சிகள் விமர்சனம்  செய்து வருகின்றனர். ஆனால், அவர் அதை கண்டுகொள்ளாமல் தமிழகத்திற்கு வருகை தந்துகொண்டிருக்கிறார். ஏற்கனவேஎ  2024ம் ஆண்டு முதன்முறையாக,  ஜனவரி 2-ம் தேதி திருச்சிக்கு வந்து, விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர்  2-வது முறையாக ஜனவரி 19-ம் தேதி தமிழகம் வந்த அவர், சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார். 20, 21-ம் தேதிகளில் திருச்சி ஸ்ரீரங்கம், ராமேசுவரம், தனுஷ்கோடி கோயில்களுக்குச் சென்று வழிபட்டார்.

தொடர்ந்து, 3-வது முறையாக  பிப்ரவரி 27-ம் தேதி தமிழ்நாடு வருகை தந்தவர், பல்லடத்தில் நடந்த அண்ணாமலையின்  ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்திலும், மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.  அப்போது, இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.  தொடர்ந்து, அடுத்த நாளான பிப்வரி 28-ம் தேதி, குலசை வின்வெளி நிலைய அடிக்கல் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை  தூத்துக்குடியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அன்றைய தினம்  திருநெல்வேலியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இதையடுத்து மார்ச் 4ந்தேதி மீண்டும் அரசு முறையாக பயணமாக சென்னை வந்த பிரதமர்  மோடி, கல்பாக்கத்தில் விரைவு ஈனுலையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அன்று மாலை  சென்னை நந்தனத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த நிலையில்,  நடப்பு ஆண்டின் 3 மாதத்திற்குள் தற்போது  5-வது முறையாக மீண்டும்  பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக  தமிழ்நாடு வரும் சேலம் உள்பட சில மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி,

மார்ச் 15-ம் தேதி சேலத்துக்கு வரும் பிரதமர், அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். சேலத்தை ஒட்டியுள்ள 4 மக்களவை தொகுதிகளுக்கு பரப்புரை மேற்கொள்ளும் வகையில் அந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

மார்ச் 16-ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுகூட்டத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மக்களவை தொகுதிகளுக்கு பரப்புரை மேற்கொள்கிறார்.

மார்ச் 17-ம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

மக்களவைத் தேர்தலையொட்டி, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. விரைவில் 2-ம் கட்ட பட்டியலை வெளியிடுவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இதில், தமிழக வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில், வரும் 15-ம் தேதி மோடி தமிழகம் வர உள்ளதாகவும், குறிப்பாக கொங்கு மண்டலம் அல்லது தென் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் மோடி பேசுவார் என்றும் கூறப்படுகிறது.