டில்லி

ன்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினம் என்பதால் அவர் நினைவிடத்தில் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாகத் தனது 93 வயதில் காலமானார். அவரது 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

எனவே டில்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இன்று  அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இவர்களைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பிற பாஜக தலைவர்களும் மரியாதை செலுத்தினர். வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யா சதைவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.