துபாய்: இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, துபாயில் உள்ள உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிபா, இந்திய தேசிய கொடியால் வண்ணமயமாக ஒளிர்ந்தது. இது பார்ப்போரை சுண்டி இழுத்தது.

இந்தியாவின் 77வது  சுதந்திர தினம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில்,  சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாயில் உள்ள  உயரமான  124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் இந்திய தேசிய கொடி, வண்ணமயமாக காட்சி அளித்தது.

2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்ட இந்த 124மாடி கட்டித்தில், நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து  அனைத்து வகையான அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த கட்டிடம் சலவைக்கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த எழில்மிகுந்த கட்டித்தை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் துபாயில் குவிந்து வருகின்றனர். இங்கு உலகின் முக்கிய நிகழ்வுகள், லேசன் ஒளிக்கற்றை மூலம் மின்னொளியில் அமைக்கப்படுவது பிரபலமாகும். இந்த நிலையில்,  இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, துபாய்ள  புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் இந்தியாவின் மூவர்ண கொடி, மகாத்மா காந்தியின் உருவம் உள்ளிட்டவை லேசர் ஒளியில் ஒளிபரப்பானது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.